onsdag 27. mars 2013

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்


பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
காணாத கண்களைக் காண வந்தாள்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்

மேலாடை
தென்றலில் ஆஹா ஹா
பூவாடை வந்ததே ம்ம்ம்ம்ம்
கையோடு வளையலும் ஜல் ஜல் ஜல்
கண்ணோடு பேசவா சொல் சொல் சொல்
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
காணாத கண்களைக் காண வந்தாள்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்

அச்சமா
நாணமா இன்னும் வேண்டுமா
அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா
மிச்சமா மீதமா இந்த நாடகம்
மென்மையே பெண்மையே வா வா வா
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
காணாத கண்களைக் காண வந்தாள்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்

நிலவிலே
நிலவிலே சேதி வந்ததா
உறவிலே உறவிலே ஆசை வந்ததா
மறைவிலே மறைவிலே ஆடலாகுமா
அருகிலே அருகிலே வந்து பேசம்மா
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
காணாத கண்களைக் காண வந்தாள்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்

படம் : வீரத்திருமகன்
இசை : விஸ்வநாதன் , ராமமூர்த்தி
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பாடியவர் : பி .பி .ஸ்ரீநினிவாஸ்

http://www.youtube.com/watch?v=9Xs036Acpys

Ingen kommentarer:

Legg inn en kommentar