mandag 25. mars 2013

பளிங்குனால் ஒரு மாளிகை

பளிங்குனால் ஒரு மாளிகை



பளிங்குனால் ஒரு மாளிகை
பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம்
உன்னை அழைக்குது வா...
(பளிங்குனால்..)

இருப்பதோ ஒரு நாடக மேடை
இரவு நேரத்து மல்லிகை வாடை
(இருப்பதோ..)
திறப்பதோ ஒரு சிந்தனை கதவு
தேடி எடுத்தால் ஆனந்த உறவு
உறவு.. உறவு..
உறவு.. உறவு..
(பளிங்குனால்..)

நாளை வருவது யாருக்கு தெரியும்
நடந்து பார்த்தால் நாடகம் புரியும்
(நாளை..)
காலை பொழுது ஊருக்கு விடியும்
கன்னி நினைக்கும் காரியம் முடியும்
முடியும்.. முடியும்..
முடியும்.. முடியும்..
(பளிங்குனால்..)

படம்: வல்லவன் ஒருவன்
இசை: வேதா
பாடியவர்: LR ஈஸ்வரி
வரிகள்: கண்ணதாசன்

Ingen kommentarer:

Legg inn en kommentar