onsdag 27. mars 2013

யார் தருவார் இந்த அரியாசனம்?

யார் தருவார் இந்த அரியாசனம்?



[ மாணிக்க
வீணையே மரகதப் பதுமையே வைரத்தில் தோய்ந்த மனமே
மதங்கமா முனிவரின் மாதவச் செல்வியே மாதுளம் சிவந்த விழியே
ஆணிப்பொன் கட்டிலே அரியாசனத்திலே அரசாள வைத்த தேவி
அறியாத நெஞ்சிலே ஓம் எனும் எழுத்திலே ப்ரணவம் தந்த காளி ]

யார் தருவார் இந்த அரியாசனம்?
யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி 
அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி 
அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம் - அம்மா
யார் தருவார் இந்த அரியாசனம்?

பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன் - உயர்ந்த
பேறு பெரும் இடத்தில் இல்லாதவன்
பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன் - உயர்ந்த
பேறு பெரும் இடத்தில் இல்லாதவன்
சேரும் சபையறிந்து செல்லாதவன்
சேரும் சபையறிந்து செல்லாதவன் - அங்கு
தேர்ந்த பொருள் எடுத்து சொல்லாதவன் தனக்கு

யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி 
அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்

கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா? - உன்
காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா?
கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா? - உன்
காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா?
சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா? ..
சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா? - உன் 
சிங்காரக் கைக்கு அபிநயம் வேண்டுமா?

திரைப்படம்: மஹாகவி காளிதாஸ்
பாடியவர்: கே.பி. சுந்தராம்பாள்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1966

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்


பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
காணாத கண்களைக் காண வந்தாள்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்

மேலாடை
தென்றலில் ஆஹா ஹா
பூவாடை வந்ததே ம்ம்ம்ம்ம்
கையோடு வளையலும் ஜல் ஜல் ஜல்
கண்ணோடு பேசவா சொல் சொல் சொல்
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
காணாத கண்களைக் காண வந்தாள்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்

அச்சமா
நாணமா இன்னும் வேண்டுமா
அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா
மிச்சமா மீதமா இந்த நாடகம்
மென்மையே பெண்மையே வா வா வா
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
காணாத கண்களைக் காண வந்தாள்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்

நிலவிலே
நிலவிலே சேதி வந்ததா
உறவிலே உறவிலே ஆசை வந்ததா
மறைவிலே மறைவிலே ஆடலாகுமா
அருகிலே அருகிலே வந்து பேசம்மா
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
காணாத கண்களைக் காண வந்தாள்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்

படம் : வீரத்திருமகன்
இசை : விஸ்வநாதன் , ராமமூர்த்தி
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பாடியவர் : பி .பி .ஸ்ரீநினிவாஸ்

http://www.youtube.com/watch?v=9Xs036Acpys